G RAM G! பெயர் மாற்றப்பட்ட.. 100 நாள் வேலை சட்ட மசோதா.. மக்களவையில் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றம்!
டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பதிலாக, 'விபி ஜி ராம் ஜி' எனும் புதிய திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன் நகலை எதிர்க்கட்சி எம்பிக்கள் கிழித்து அமைச்சர் மீது வீசி எறிந்தனர்.
இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நள்ளிரவு கடந்து, 1.30 மணி வரை நடைபெற்றிருந்தது. மொத்தம் 98 எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றிருந்தார்கள். இந்நிலையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மசோதா மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விவாதத்திற்கு பதிலளித்து, மசோதாவை நிறைவேற்ற முன் வந்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட தொடங்கினர். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் 100 நாட்கள் வேலை என்பதை, 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. மக்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்திருந்த அமைச்சர் சவுகான்,
"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, காந்தியின் கொள்கைகளை நிஜமாக்க முயன்று வருகிறது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், உஜ்வாலா யோஜனா, தூய்மை பாரதம், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மூலம் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தி காந்தியின் லட்சியங்களை அரசு உண்மையாக்கி வருகிறது. இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசுதான் காந்தியின் கொள்கைகளை கைவிட்டது" என்று விமர்சித்திருந்தார்.
இந்த மசோதா மீது சுமார் 8 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இருப்பினும் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், மசோதா நகலை அமைச்சருக்கு முன்பு கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில், இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியை நடத்தினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு' என்று எழுதப்பட்ட பெரிய பதாகையை ஏந்தியபடி, பிரேர்ணா ஸ்தல் பகுதியில் உள்ள காந்தி சிலையில் இருந்து மகர் துவார் வரை ஊர்வலமாகச் சென்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக தலைவர்களான கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. ராசா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இ.டி. முகமது பஷீர், சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) அர்விந்த் சாவந்த், ஆர்.எஸ்.பி-யின் என்.கே. பிரேம்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியும் இதில் பங்கேற்றிருந்தார்.
இந்த சட்டம் குறித்து தனது x தளத்தில் பதிவிட்டிருந்த மல்லிகார்ஜுன கார்கே, "மோடி அரசு தேசத்தந்தை மகாத்மா காந்தியை அவமதித்ததுடன், இந்தியாவின் கிராமங்களில் சமூக-பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்த வேலை செய்யும் உரிமையையும் நசுக்கிவிட்டது. ஆளும் சர்வாதிகார அரசாங்கத்தின் இந்த அராஜகத்தை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் இருந்து தெருக்கள் வரை நாங்கள் போராடுவோம்" என குறிப்பிட்டிருந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications