லோக்சபா சபாநாயகர்: ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை தோல்வி- "இந்தியா" கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி!
டெல்லி: 18-வது லோக்சபா சபாநாயகரை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்வதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொன்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், "இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் லோக்சபா சபாநாயகரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
18-வது லோக்சபா கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இன்றும் லோக்சபாவில் புதிய எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். எம்பிக்கள் பதவியேற்பு இன்றுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறும். லோக்சபா சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று 12 மணியுடன் நிறைவடைகிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை ஆளும் பாஜக கூட்டணி இன்னும் அறிவிக்கவில்லை. 17-வது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, தற்போதைய லோக்சபாவின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப், தற்காலிக துணை சபாநாயகர் ராதாமோகன் சிங், புரந்தேஸ்வரி ஆகியோரில் ஒருவரை பாஜக தரப்பு லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது.
"இந்தியா" கூட்டணியைப் பொறுத்தவரை லோக்சபா சபாநாயகர் பதவி என்பது போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்; ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு தரப்பு எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் எதிர்க்கட்சிகளுடன் நடத்த முன்வரவில்லை என அந்த அணியின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இடதுசாரி கட்சிகளில் ஒன்றான புரட்சிகர சோசலிஸ்ட், இந்தியா கூட்டணி சார்பில் லோக்சபா சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜூ உள்ளிட்டோர் அடங்கிய குழு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் போட்டியின்றி லோக்சபா சபாநாயகரை தேர்வு செய்ய மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர இந்தியா கூட்டணி வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு தரப்பு இதனை ஏற்காததால் ராஜ்நாத் சிங் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications