Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
டெல்லி: தெற்கு அந்தமான் கடலில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை இந்த காற்றழுத்தம் புயலாக மாறினால் இதற்கு பெயர் ஜவாத் என்று சூட்டப்படும்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் டிசம்பர் 1ஆம் தேதி அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடல்
அந்தமான் மற்றும் அரபிக் கடல் பகுதியில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாவதால் தமிழகத்தில் மேலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

வடமேற்கு திசை
பின்னர் 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் அது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலுக்கு ஜாவத்
ஒரு வேளை அது புயலாக மாறினால் அந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்படும். இது அநேகமாக ஒடிஸா, வங்கதேசம் அல்லது வடஇந்திய மாநிலங்களை நோக்கி செல்லலாம் என தெரிகிறது. அதிலும் இது ஒடிஸா கடலோரத்தை நோக்கி செல்வதால் பெர்ஹாம்பூர் - பூரி இடையே கரையை கடக்கும் என தெரிகிறது.

ஆந்திரா
ஆனால் இந்த புயலின் நகர்வு ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தை நோக்கியும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எனவே இந்த புயலானது டிசம்பர் 3 முதல் 5 ஆம் தேதிக்கு வடக்கு ஆந்திர அல்லது தெற்கு ஒடிஸா இடையே கரையை கடக்கும் என ஸ்கைமெட் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஜாவத் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. ஜாவத் என்றால் தாராள மனப்பான்மை என்பது பொருளாகும்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications