ஏழைகளுக்கான ஆட்சியை காங்கிரஸ் மட்டுமே வழங்குகிறது! சிலிண்டர் விலை உயர்வு பற்றி ராகுல்காந்தி ட்விட்
டெல்லி: ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனுக்கான ஆட்சியை காங்கிரஸ் மட்டுமே வழங்குகிறது என சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து ராகுல்காந்தி கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தலுக்கு பிறகு படிபடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்க துவங்கின.

ரூ.50 உயர்வு
தற்போது கடந்த ஒருமாதமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் அடையவில்லை. இருப்பினும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து வருகின்றன. நேற்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ரூ.965க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1000யை கடந்து ரூ.1,015 விற்பனை செய்யப்படுகிறது.

2வது முறையாக உயர்வு
இதற்கு முன்பு மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த மாத துவக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.104 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ராகுல்காந்தி விமர்சனம்
இதற்கு மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவலா குற்றம்சாட்டினர். இன்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், 2014 காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சிலிண்டர் விலையையும்,பாஜக ஆட்சியின் சிலிண்டர் விலையையும் ஒப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
Recommended Video


ஏழைகளுக்கான ஆட்சி காங்கிரஸ் மட்டுமே
‛‛சமையல் எரிவாயு சிலிண்டர் 2014 காங்கிரஸ் ஆட்சியில் ரூ.410 ஆகவும், மானியம் ரூ.827 ஆகவும் இருந்தது. 2022 பாஜக ஆட்சியில் ரூ.999 ஆகவும், மானியம் பூஜ்ஜியமாகவும் இருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2 சிலிண்டர் வாங்குவதற்கான காசை தற்போது ஒரு சிலிண்டருக்கு கொடுக்கும் நிலை உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனுக்கான ஆட்சியை வழங்குவது என்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான். இதுதான் நமது பொருளாதார கொள்கையின் அடிப்படையாகும்'' என தெரிவித்துள்ளார்.
-
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
ஈரான் - அமெரிக்கா போரால் நெருக்கடி.. பிரதமர் மோடி டெல்லியில் அவசர மீட்டிங்! ஆலோசித்தது என்ன? -
"இந்த" 4 விஷயத்தை பண்ணுங்க.. சிலிண்டர் அதிக காலத்திற்கு வரும்.. அடடே இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications