மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடையில்லை... உச்சநீதிமன்றம் பரபர உத்தரவு
டெல்லி: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதற்கு எந்த தடையும் இல்லை என இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
Recommended Video
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

தகுதிநீக்க நோட்டீஸ்
இதனால் மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாடி கூட்டணியின் ஆட்சி கவிழும் நிலை உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை மகாராஷ்டிரா துணை சபாநாயகர் வழங்கினார். இதற்கு தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடிஉள்ளது. 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தி் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வேளையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறி இருப்பது சட்டவிரோதமானது என சிவசேனா கொறாடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு எனும் ஆளுநர் உத்தரவை எதிர்க்கும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்
இந்த வழக்கு மீது இன்று மாலை விசாரணை துவங்கியது. சிவசேனா மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களும் அனல் பறந்தன. சிவசேனா தரப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வெறும் ஒரே ஒரு நாள்தான் காலஅவகாசம் வழங்குகிறார் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்த உடன் இந்த அறிவிப்பு வெளியாகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வாக்களிக்க முடியும். முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என சிவசேனா தரப்பில் வாதமாக வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சார்பில் வாதம் செய்யப்பட்டது. மேலும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கும், எம்எல்ஏக்களின் தகுதி நீக்க நோட்டீஸ்க்கும் சம்பந்தம் இல்லை என எதிர்தரப்பு வாதம் செய்தது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அனுமதி
இந்நிலையில் 9 மணிக்கு வழக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது. இதையடுத்து 9 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், ‛‛நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவுக்கு தடையில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது'' என கூறப்பட்டது.இதன்மூலம் நாளை மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications