Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவி, வீடு, கர்ப்பப்பை என எல்லாத்தையும் இழந்தேன்! ஆனால் எதை பெற்றேன் தெரியுமா? தெறிக்கவிட்ட மஹுவா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான் ஒரு அறுவை சிகிச்சையின் போது எனது கர்ப்பப்பையையும் இழந்துவிட்டேன். ஆனால் நான் எதைப் பெற்றேன் தெரியுமா என திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசிய பேச்சுகள் வைரலாகி வருகின்றன.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சியினருடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்த நிலையில் புதிதாக அமைந்த அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கியது.

mahua moitra rahul gandhi parliament session

இந்த கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவருடைய உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அந்த வகையில் கூட்டத் தொடரின் 6ஆவது நாளான நேற்று மக்களவையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் நடந்தது. இத்தகைய சூழலில்தான் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல்முறையாக நேற்று உரையாற்றினார்.

இந்த நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணமூலம் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, "கடந்த முறை நான் இந்த நாடாளுமன்றத்தில் நின்ற போது எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு எம்பியின் குரல்வளையை நெரித்ததால் ஆளும் பாஜக அரசு பெரும் விலை கொடுத்துவிட்டது. என்னை ஒடுக்க நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் மக்கள் உங்களது 63 எம்பிக்களை நிரந்தரமாக வீட்டில் உட்கார வைத்துவிட்டனர். தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும் கட்சியின் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை.

நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளோம். இன்னமும் பாஜகவினர் அவர்களது அரசு மைனாரிட்டி என்பதை உணரவே இல்லை. எதிர்க்கட்சிகளை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் செங்கோலுடன் குடியரசுத் தலைவர் அழைத்து வரப்பட்டார். இது ஜனநாயக நாடு. இங்கு செங்கோல் எதற்காக?

மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். ஜனாதிபதி உரையில் ஒரு வார்த்தை கூட மணிப்பூர் குறித்து இல்லையே ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அது போல் அவர் மேலும் பேசுகையில் நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன், வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.

நான் எதைப் பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்படமாட்டேன்! உங்கள் ஆட்சியின் முடிவை நாங்கள் பார்ப்போம். உங்கள் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை, உங்கள் கேலிகள், உங்கள் ஊடகங்கள் என எதுவும் எங்களை பயமுறுத்தாது. இவ்வாறு மஹுவா ஆவேசமாக பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி நேற்று நிறைய கேள்விகளை எழுப்பியிருந்தார்.அவர் ஆற்றிய உரைகளில் சில பகுதிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதுகுறித்து ராகுல் செய்தியாளர்களிடம் பேசுகையில் மோடி உலகில்தான் உண்மையை மறைக்க முடியும். உண்மையான உலகில் உண்மையை மறைக்கவே முடியாது. அவை குறிப்பிலிருந்து எதை வேண்டுமானாலும் நீக்கட்டும் என ராகுல் காந்தி பதில் அளித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+