தேசத்துக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்... மம்தா பானர்ஜி தடாலடி
டெல்லி: நாட்டை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தான் தயாராகிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி இன்று 'ஜனநாயக பாதுகாப்பு பேரணி என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸைச் சேர்ந்த ஆன்ந்த் சர்மா, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீதராம் யெச்சூரி, தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், நாங்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) காங்கிரஸ் கட்சியுடனும், கம்யூனிஸ்டுகளுடனும் மாநில அளவில் சண்டை போட்டு வருகிறோம். ஆனால் ஒட்டு மொத்த தேசத்துக்கு ஆபத்தாக உள்ள பாஜகவை தோற்கடிக்க, கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்.
நாட்டில் இப்போது ஜனநாயகம் மோடி நாயகமாகியுள்ளது. எமர்ஜென்சி காலத்தில் இருந்ததைவிட மோசமான நிலையில் தற்போது நாடு இருக்கிறது. எல்லோருக்கும் கப்பர்சிங் படத்தை பற்றி தெரியும். தற்போது நாட்டில் இரண்டே கப்பார் சிங் தான் உள்ளனர்; ஒருவர் மோடி, மற்றொருவர் அமித்ஷா என்றார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமராக மோடி இருப்பது இன்று தான் கடைசி நாள். இனி அவர் வாழ்நாளில் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்றும் கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications