மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் மமதா, நவீன் பட்நாயக், பினராயி விஜயன்.. பரபரப்பு விளக்கம்!
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். ஆனால் இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
நாட்டின் பிரதமாக மோடி இன்று மீண்டும் பதவியேற்கிறார். இதற்கான விழா இன்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். சுமார் 8000 விருந்தினர்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மமதா புறக்கணிப்பு
இதற்கான விழா ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மமதா டிவிட்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ‘வாழ்த்துகள்.. புதிய பிரதமர் மோடி. மோடி, பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்பதற்கு முடிவு செய்திருந்தேன். ஆனால், கடைசி ஒரு மணி நேரமாக, மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் பாஜகவின் செய்திகளைப் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறானது.

அரசியல் ஆதாயம்
மேற்குவங்கத்தில் எந்த அரசியல் படுகொலைகளும் நடைபெறவில்லை. தனிப்பட்ட வெறுப்பு, குடும்ப பிரச்னைகளின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பிரச்னையால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம். அரசியலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மன்னியுங்கள் மோடி.. இந்த விவகாரம் பதவியேற்பு விழாவில் என்னை கலந்துகொள்ளவேண்டாம் என்று முடிவு எடுக்கவைத்துள்ளது. அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன். இவ்வாறு மமதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக் விளக்கம்
இதேபோல் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தான் பங்கேற்காததன் காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். அந்த விழாவில் நவீன் பட்நாயக் பங்கேற்க வேண்டும் என்பதால் டெல்லியில் நடைபெறும் மோடியின் பதவியேற்பு மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

விளக்கமளிக்காத பினராயி விஜயன்
இதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். கேரள அரசின் சார்பாக யாரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை கேரள முதல்வர் அலுவலகம் வெளியிடவில்லை.

திமுக எம்பிக்கள் புறக்கணிப்பு
இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் காரணமாக திமுக எம்பிக்கள் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications