ஜனநாயகத்தை கொன்றது மோடி அரசு.. காப்பாற்றி விட்டது சுப்ரீம் கோர்ட்.. மமதா மகிழ்ச்சி
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினை வரவேற்பதாக மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ முன் ஆஜராக சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். ஜனநாயகத்தை மோடி அரசு கொன்றேவிட்டது, ஆனால், இப்போது, அதே ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவின் மூலம் காப்பாற்றியுள்ளது " என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்குவங்க விவகாரம் கடந்த சில தினங்களாக பற்றி எரிந்து வருகிறது. இது தொடர்பாக சிபிஐ பிரமாணப் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
அதில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மூத்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த மோசடி விவகாரத்தில் மூத்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என அந்த பிரமாணப் பத்திரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மமதா வரவேற்பு
இந்நிலையில், இது சம்பந்தமான வழக்கினை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அப்போது, கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவினை மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சொன்னதாவது:

நாங்களா குற்றவாளிகள்?
சிபிஐக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று நாங்கள் எப்போது சொன்னோம்? அப்படி நாங்கள் சொன்னதே கிடையாது. சிட் பண்ட் நிதி முறைகேட்டின் முக்கியக் குற்றவாளியை நாங்கள்தான் கைது செய்தோம். குற்றவாளிகளை நாங்கள் கைது செய்தபோது, எப்படி நாங்கள் குற்றவாளிகளாக இருக்க முடியும்?

அரசியல் சாசனம்
அதனால் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும். திரிணாமூல் காங்கிரஸ் மட்டும் தனியாக போராடவில்லை, ஒட்டு மொத்த தேசமும் ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க போராடியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மூலம் அரசியல் சாசனச் சட்டம் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஜனநாயகம்
அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தை கொன்றதுதான் மோடி அரசு. ஆனால், இப்போது, அதே ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவின் மூலம் காப்பாற்றியுள்ளது. " என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications