திடீர்னு தீக்குளித்த 2 பேர்.. அதுவும் சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே.. என்ன காரணம்?.. டெல்லியில் பரபரப்பு
சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே தீக்குளிக்க 2 பேர் முயன்றுள்ளனர்
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில், சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே 2 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லியில் சுப்ரீம் கோர்ட் அமைந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாகவும், பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவும் காணப்படும்...
மிக முக்கிய வழக்குகள், மேல்முறையீடுகள், சம்பந்தமான விசாரணைகள் இங்கு தினந்தோறும் நடப்பதால், ஏராளமான மக்கள் நடமாட்டம் காணப்படும்.. அதனால் எந்நேரமும் போலீஸ் செக்யூரிட்டிகளும் அங்கு அதிகமாக இருப்பார்கள்.

பாதுகாப்பு
சுற்றிலும் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும்.. அப்படிப்பட்ட பாதுகாப்பு நிறைந்த சுப்ரீம்கோர்ட்டில் "டி" எண் கொண்ட நுழைவாயில் பகுதியில் இன்று மதியம் 12 மணிக்கு, திடீரென ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கையில் வைத்திருந்த பெட்ரோலை தங்கள் உடம்பில் கடகடவென ஊற்றி கொண்டு, தீ வைத்தும் கொளுத்தி கொண்டனர்.

அதிர்ச்சி
உடம்பெல்லாம் நெருப்பு பற்றிக் கொண்டு எரிந்த நிலையில், அவர்கள் அலறி துடித்தனர்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார், ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றி, தீயை அணைத்து 2 பேரையுமே மீட்டனர்.. ஆனால், அதற்குள் அவர்களுக்கு உடம்பில் காயம் ஏற்பட்டது.. இதையடுத்து இருவரையும் ராம் மனோகர் லோஹியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. அங்கு தீயில் எரிந்து போன 2 பேருக்குமே தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

தற்கொலை
இந்தியாவில் கடன், குடும்ப பிரச்சனை, மன அழுத்தம் போன்ற காரணங்களுக்காக ஒருநாளைக்கு சராசரியாக 312 பேர் தற்கொலை செய்வதாக ஏற்கனவே தேசிய குற்ற ஆவணகாப்பகம் அறிக்கை ஒன்றை தெரிவித்திருந்தது.. அதிலும் டெல்லியில்தான் அதிக தற்கொலைகள் நடப்பதாக கூறியிருந்தது.. அப்படி இருக்கும்போது, இன்றும்கூட ஒரு தற்கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை தந்துவருகிறது..

பாதுகாப்பு
அதிலும், அத்தனை போலீஸ் பாதுகாப்புகளையும் மீறி , சுப்ரீம் கோர்ட் வாசலிலேயே நடந்த இந்த சம்பவம் கூடுதல் ஷாக்கை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், தற்கொலைக்கு முயன்றவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.. ஒருவேளை வழக்கு சம்பந்தமாக ஏதாவது பாதகமான தீர்ப்பு வந்ததா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், கோர்ட் வாசலில் வந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால், வழக்கின் பாதிப்புதான் காரணம் என்று ஓரளவு யூகிக்கப்படுகிறது.. விசாரணை நடந்து வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications