மண்டல் கமிஷன் நாயகன்... ராம் விலாஸ் பஸ்வான்...அப்படி என்னதான் செய்து விட்டார்!!
டெல்லி: இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து இருப்பதற்கும் அவர்கள் பெரிய பதவிகளை அலங்கரித்துக் கொண்டு இருப்பதற்கு மறைந்த அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தான் காரணம் என்பது பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
இவர் இல்லாமல் மண்டல் கமிஷன் இல்லை. இவரால்தான் எஸ்டி/எஸ்சி (வன்முறை தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்தது என்று கூறலாம். அந்த அளவிற்கு மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்குடன் இணைந்து மண்டல் கமிஷனை அமல்படுத்தியுள்ளார். ஏன் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விபி சிங்கிற்கு ஆதரவாக, மண்டல் கமிஷனை ஆதரித்து ஒரு விளம்பர தூதரைப் போன்று பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கமிஷன் அறிக்கையை பிபி மண்டல் சமர்ப்பித்தார். இதுதான் இன்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியிருனக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வமுறை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த இரண்டு சட்டங்களுக்காக இன்றும் இவரை பீகாரில் தலித்களுக்கான பெரிய அரசியல் தலைவராக பார்க்கின்றனர். மறைந்த கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியை துவக்குவதற்கு முன்பே தலித்களுக்கு என்று தலித் சேனா என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். ஆனாலும், உத்தரப் பிரதேசத்தில் கன்சிராம் வளர்த்துக் கொண்டது போல் இவரால் தலித் சேனாவை வளர்க்க முடியவில்லை. பீகாரை கடந்து இவரால் தேசிய அரசியலுக்கும் வர முடியவில்லை.












Click it and Unblock the Notifications