Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத்துறை பொய் சொல்கிறது.. மணீஷ் சிசோடியா சொத்துக்கள் முடக்கம் விவகாரத்தில் கெஜ்ரிவால் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியதாக அமலாகக்த்துறை தெரிவித்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தவறான தகவலை பரப்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Manish Sisodias 52 crore assets not frozen: Kejriwal denies, says ED spread False news

இதற்கு ஆதாயமாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அப்போது டெல்லி முன்னாள் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக சிசோடியா உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேதி மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் டெல்லி தலைமை செயலகத்தில் மணீஷ் சிசோடியா அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இதை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் மணீஷ் சிசோடியா அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 52 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியதாக அமலாகக்த்துறை தெரிவித்தது.

அவரது சொத்து மட்டுமின்றி அமந்தீப் சிங் தால், ராஜேஷ் ஜோஷி, கௌதம் மல்ஹோத்ரா ஆகியோரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அமலாகக்த்துறை கூறியது பொய் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சாடியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்வீட் பதிவில், மணீஷ் சிசோடியா சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்கிறது.

மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்தான் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்கள் மதுபான கொள்கை அமல்படுத்துவதற்கு முன்பே வாங்கியது" என்று தெரிவித்துள்ளார். மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக ஆதரங்கள் கிடைக்காததால் அமலாக்கத்துறை அவதூறு பரப்புகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+