இன்னுமா சிவசேனாவை ஆதரிக்கிறீங்க...இதெல்லாம் இரட்டை வேடம்... காங். மீது மாயாவதி கடும் தாக்கு
டெல்லி: சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சிவசேனாவை தொடர்ந்து ஆதரிப்பது இரட்டை வேடம்தான் என காங்கிரஸ் கட்சியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக மாயாவதி தமது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:
சிவசேனாவை பொறுத்தவரை தமது கொள்கையில் இதுவரை உறுதியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை சிவசேனா ஆதரித்தது.

தற்போது சாவர்க்கர் குறித்த விமர்சனத்தில் காங்கிரஸ் மீது கோபத்தை காட்டுகிறது சிவசேனா. ஆனாலும் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு இன்னமும் காங்கிரஸ் ஆதரவு தருகிறது.
இது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் அல்லாமல் வேறு என்ன? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
அப்படி தெளிவுபடுத்தாமல் போனால், கட்சியின் பலவீனங்களை மக்கள் புரிந்து கொள்வதில் இருந்து திசைதிருப்ப காங்கிரஸ் நடத்தும் நாடகம் என்றே கருத வேண்டியது இருக்கும்.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications