ஸ்டேன் சாமிக்கு உரிய சிகிச்சை தரப்பட்டது.. ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்!
டெல்லி: ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் உடல்நிலை நீதிமன்றம் மூலம் தொடர்ந்து கவனிக்கப்பட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக ஸ்டோன் சாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

பெயில் கிடைக்காத நிலையில் நேற்று மருத்துவமனையில் இவர் மரணம் அடைந்தார். இந்த நிலையில் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஐநாவின் மனித உரிமை அமைப்பின் உயர் கமிஷ்னர் லிஸ் த்ரோசல் ஸ்டேன் சாமியின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். ஸ்டேன் சாமி கஸ்டடியில் மறைந்தது வருத்தத்தையும், கவலையையும் உண்டாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஐநா மற்றும் ஐரோப்பா யூனியன் அமைப்பின் பல்வேறு ஸ்டேன் சாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, இது மிகவும் வருத்தமான செய்தி என்று தெரிவித்துள்ளது. பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியின் மரணம் வேதனையளிக்கிறது, கருத்து சுதந்திரம் என்னும் உரிமையை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐநா உள்ளிட்ட உலக அமைப்புகளின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் உடல்நிலை நீதிமன்றம் மூலம் தொடர்ந்து கவனிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டுதான் ஸ்டேன் சாமி என்ஐஏ மூலம் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு பிரிவு காரணமாக, இவரின் பெயில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த வழக்கில் முறையாக நீதி கடைபிடிக்கப்பட்டது. இதில் எங்கும் சட்டம் மீறப்படவில்லை. அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தன. அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.சுதந்திரமிக்க சட்டத்துறை மூலம் மட்டுமே அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்று இந்தியா விளக்கம் கொடுத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications