Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டேன் சாமிக்கு உரிய சிகிச்சை தரப்பட்டது.. ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் உடல்நிலை நீதிமன்றம் மூலம் தொடர்ந்து கவனிக்கப்பட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக ஸ்டோன் சாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

MEA says that Stan Swamy closely monitored and treated in hospital after UN outrage

பெயில் கிடைக்காத நிலையில் நேற்று மருத்துவமனையில் இவர் மரணம் அடைந்தார். இந்த நிலையில் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஐநாவின் மனித உரிமை அமைப்பின் உயர் கமிஷ்னர் லிஸ் த்ரோசல் ஸ்டேன் சாமியின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார். ஸ்டேன் சாமி கஸ்டடியில் மறைந்தது வருத்தத்தையும், கவலையையும் உண்டாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஐநா மற்றும் ஐரோப்பா யூனியன் அமைப்பின் பல்வேறு ஸ்டேன் சாமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, இது மிகவும் வருத்தமான செய்தி என்று தெரிவித்துள்ளது. பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியின் மரணம் வேதனையளிக்கிறது, கருத்து சுதந்திரம் என்னும் உரிமையை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐநா உள்ளிட்ட உலக அமைப்புகளின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் உடல்நிலை நீதிமன்றம் மூலம் தொடர்ந்து கவனிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டுதான் ஸ்டேன் சாமி என்ஐஏ மூலம் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு பிரிவு காரணமாக, இவரின் பெயில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த வழக்கில் முறையாக நீதி கடைபிடிக்கப்பட்டது. இதில் எங்கும் சட்டம் மீறப்படவில்லை. அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தன. அவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.சுதந்திரமிக்க சட்டத்துறை மூலம் மட்டுமே அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்று இந்தியா விளக்கம் கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+