நாய் செத்தால் கூட வருந்துவார்கள்.. 600 விவசாயிகள் சாவை பாஜக கண்டுக்கொள்ளவில்லை...ஆளுநர் மாலிக்
டெல்லி: கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்து வரும் மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டு, மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட போது அங்கு ஆளுநராக இருந்தவர் ஆளுநர் சத்ய பால் மாலிக். தேசிய அளவில் அப்போது ஆளுநர் சத்ய பால் மாலிக் கவனிக்கப்பட்டார்.
அதன்பின் கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது மேகாலயா ஆளுநராக ஆளுநர் சத்ய பால் மாலிக் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் ஒன்றை ஆளுநர் சத்ய பால் மாலிக் வைத்துள்ளார்.

மேகாலயா
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் வைத்துள்ள விமர்சனத்தில், டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய் இறந்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள். ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள் வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

இரங்கல்
எனக்கு பதவி மீதான பற்று கிடையாது. நான் பதவி போய்விடுமே என்று அச்சப்படவில்லை. என் பதவி பறிக்கப்பட்டால் பறிக்கப்படட்டும். பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட போது இஸ்லாமியர்களை கெட்டவர்களாக வர்ணித்தது போல இப்போதும் செய்கிறார்கள். செங்கோட்டையில் சுதந்திர தினத்தின் போது விவசாயிகள் போராடியதை விமர்சனம் செய்கிறார்கள்.

பதவி
ஜாட் இன மக்களுக்கும், சீக்கியர்களுக்கு செங்கோட்டையில் கொடி ஏற்ற எல்லா உரிமையும் உள்ளது. அவர்களுக்கு இல்லாத உரிமையா? செங்கோட்டையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதை தவறாக சித்தரிக்கிறார்கள். இந்த அரசில் சிலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். சிலர் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

டெல்லி
டெல்லியில் போராடும் விவசாயிகள் வெறும் கையோடு திரும்ப மாட்டார்கள். அவர்கள் வெற்றியோடுதான் திரும்புவார்கள். ஒரு அநீதி இழைக்கப்படும் போது அதற்கு எதிராக மக்கள் போராடவே செய்வார்கள். விவசாயிகளின் மகன்கள் பலர் ராணுவத்தில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களையும் இந்த போராட்டங்கள் பாதித்து உள்ளது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications