Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய முக்கிய கேள்வி.. மத்திய அரசு தந்த அதிரடி பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.927 கோடி மட்டுமே என தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது என்றும் 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது என்றும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை 125 வேலை நாட்களுடன் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ராம் என்று வரும் வகையில் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முந்தைய திட்டத்தில் 90 சதவீதம் மத்திய அரசு வழங்கிய நிலையில், புதிய திட்டத்தில் 60 சதவீதம் தான் வழங்குவோம் என்று கூறியுள்ளது. தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது நள்ளிரவு வரை கடுமையான விவாதங்கள் நடந்தது. எப்படியாவது திட்டத்தை மாற்றுவதை தடுக்க எதிர்க்கட்சிகள் கடுமையாக நடந்து கொண்டன. மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்தார். நள்ளிரவில் தர்ணாவிலும் ஈடுபட்டார்கள்

Central Govt Notification MGNREGS Thamizhachi Thangapandian tamil nadu 100

ஆனாலும் ஆளும் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவோடு நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதலும் அளித்து விட்டார். விரைவில் அது சட்டமாக இருக்கிறது. இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிதி பாக்கி வைத்திருப்பதாகவும், தமிழ்நாட்டுக்கும் நிதி பாக்கி உள்ளதாவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான கேள்வியை தென் சென்னை தொகுதி எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்ட கேள்விகள் மூலம் பதிலாக கிடைத்திருக்கிறது அந்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் கமலேஷ் பஸ்வான் கூறுகையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய ஆண்டுகளின் ஏற்கத்தக்க நிலுவை பொறுப்புகள் ஏதேனும் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் முறையாக ஈடு செய்யப்படுகின்றன.

அதன்படி, 2024-2025 நிதியாண்டு வரையில் செலுத்தப்பட வேண்டிய மற்றும் ஏற்கத்தக்க அனைத்து நிலுவை ஊதிய பொறுப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் நிதி பாக்கி இன்னும் தீர்க்கப்படவில்லை.

2024-2025-ம் நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.
இதில் ஊதியக் கூறுக்காக ரூ.5,836.20 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.660.86 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.

10-12-2025 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதியப்பணம் தொடர்பான மொத்த நிலுவைத்தொகை ரூ.304.80 கோடி ஆகும். மேலும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.622.21 கோடியாக உள்ளது. நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையை மாநிலத்துக்கு விடுவிக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது" இவ்வாறு அமைச்சர் கமலேஷ் பஸ்வான் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+