இளையராஜா என்ன குற்றம் செய்தார்?.. அறிவாலயத்திற்கு பிடிக்காவிட்டால் எதையும் கூறக் கூடாதா? எல் முருகன்
டெல்லி: இளையராஜா அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சட்ட மாமேதை அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு அம்பேத்கர் அன்ட் மோதி என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் எழுதியிருக்கையில் பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

உள்கட்டமைப்புகள்
இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார்.

மோடியின் கனவு
அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரை எப்படி மோடியுடன் ஒப்பிடலாம் என பலதரப்பினர் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள். சினிமா துறையினரே பலர் இளையராஜாவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

என்ன குற்றம்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா?
Recommended Video

எதிர்ப்பு
கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் அத்தகைய கருத்து சுதந்திரம் எதற்காக இளையராஜாவுக்கு மறுக்கப்படுகிறது. திமுக தலித் சமூகத்தினருக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையில் உள்ளதையே அவர்களது எதிர்ப்பு காட்டுகிறது என எல் முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications