அந்தாண்ட அமித்ஷா.. இந்தாண்ட ராஜ்நாத் சிங்.. நடுவுல பிரதமர் மோடி.. நல்லா கேப் விட்டு உட்காருங்க!
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று காலை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் சமூக விலகலை பின்பற்றும் நோக்கில் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் லாக் டவுன் நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் அருகருகே இல்லாமல் இடைவெளிவிட்டு போடப்பட்டிருந்தது. நடுவில் மோடி உட்கார்ந்திருந்தார். அவருக்கு வலது பக்கம் அமித்ஷாவும், இடது பக்கம் ராஜ்நாத் சிங்கும் அமர்ந்திருந்தனர்.
பின்னர் சுற்றி மற்ற அமைச்சர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதன் மூலம் சமூக விலகல் குறித்து விழிப்புணர்வை மத்திய அரசு ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. நேற்று நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா காட்டுத் தீ போல் பரவி வருகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக விலகலை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.
சமூக விலகலுக்காகவும் சமூக பரவலை தடுக்கவும்தான் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. எனவே சமூக விலகலை பின்பற்றுவோம்! சமூக பரவலைத் தடுப்போம்!












Click it and Unblock the Notifications