Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்.. தப்பித்தது இப்படித்தான்! வெளியான புதிய வீடியோ!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: கடந்த 12ம் தேதி ஏஐ-171 எனும் ஏர் இந்தியா விமானம் , குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்தில் சிக்கியது. இதில் விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்கிற ஒரேயொரு பயணி மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். அவர் எப்படி விபத்திலிருந்து தப்பினார் என்பது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் விமானம் மோதிய பிறகு, தீப்பற்றி எரிந்திருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரேயொரு நபர் மட்டும், விடுதியின் மெயின் கேட் வழியாக செல்போனை கையில் எடுத்துக்கொண்டு வந்தார். பின்னர்தான் தெரிந்தது, விபத்தில் உயிர் பிழைத்தது இவர் மட்டும்தான் என்று. இவரை உடனடியாக மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Air India Ahmedabad plane

இவர் மெயின் கேட்டிலிருந்து நடந்து வந்த வீடியோதான் தற்போது இணையத்தில் பரவலாக ஷேராகி வருகிறது. வீடியோவில், அவர் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து, இடது கையில் மொபைல் போனுடன் விபத்து நடந்த இடத்தில் இருந்து வெளியே வருகிறார்.

விமானத்தில் 11A எண் இருக்கையில் இவர் அமர்ந்திருந்தார். இந்த இருக்கை விமானத்தின் அவசரக்கால கதவுக்கு பக்கத்தில் இருக்கிறது. தான் உயிர் பிழைத்தது குறித்து கூறிய அவர், "நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்பதை இன்னும் நம்பவில்லை. எப்படி உயிர் பிழைத்தேன் என்று தனக்குத் தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் செத்துப்போய்விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், கண் திறந்து பார்த்தபோது, உயிருடன் இருந்தேன். உடனே எனது சீட் பெல்ட்டை கழற்றி வெளியே வந்தேன். எனது கண் முன்னாலேயே விமானப் பணிப்பெண் மற்றும் எனது அங்கிள், ஆன்ட்டி எல்லோரும் இறந்துவிட்டார்கள்.

விமானத்திலிருந்து நான் வெளியே வந்தபோது தரையில் இருப்பதை உணர்ந்தேன் இருந்தேன். கட்டிடத்தின் சுவர் எனக்கு எதிர் பக்கமாக இருந்ததால், எல்லோரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குப் பிறகு, அது சிக்கலில் இருப்பதை போல் உணர்ந்தேன். பின்னர் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் எரிந்தன. விமானத்தை மேலே உயர்த்த விமானிகள் போராடிக்கொண்டிருந்தார்கள். என்ன நடக்கிறது என்பதை புரிந்துக்கொள்வதற்குள், விபத்து நடந்தவிட்டது" என்று கூறியுள்ளார்.

இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட, 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்க டிஎன்ஏ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஷ் குமார் ரமேஷ் தான்.

விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 32 வினாடிகளில் விபத்துக்குள்ளானது. இது எப்படி நடந்தது? மனித தவறு காரணமா? இயந்திர கோளாறா? பறவை மோதலா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+