பிரதமரின் பேச்சை தவறாக திசை திருப்புகிறார்கள்.. மோதலுக்கு பின் சீனா அத்துமீறவில்லை- வெளியான விளக்கம்
டெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறித்து திரித்து, அரசியல் செய்யப்படுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, இந்தியாவில் ஒரு இன்ச் நிலப்பகுதியை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
Recommended Video
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சீனா ஆக்கிரமிக்கா விட்டால் எதற்காக மோதல் நடைபெற்றது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

தவறான புரிதல்
பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும், இவ்வாறு கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் அலுவலகம் ஒரு விளக்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பரப்பப்படுகிறது. பிரதமர் தனது உரையின்போது இந்திய எல்லைக்குள் ஊடுருவ நடக்கும் எந்த ஒரு முயற்சியும் முறியடிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

பதிலடி
கடந்த காலங்களில் இழந்ததை போல அல்லாமல், இப்போது எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார். சீனா பெரும் படை எண்ணிக்கையில் எல்லைப் பகுதிக்கு வந்தது. இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்தது. ஜூன் 15ஆம் தேதி கல்வான் பகுதியில் சில கட்டமைப்புகளை சீனா எழுப்பியதால் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகுதான் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

மோதலுக்கு பிறகு ஆக்கிரமிப்பு இல்லை
இந்த மோதலுக்கு பிறகு, சீன ராணுவத்தால் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க முடியவில்லை. ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. யாராவது எல்லை தாண்ட முற்பட்டால் அவர்களுக்கு இந்த மண்ணின் வீரமிக்க மகன்கள் தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக கூறியுள்ளார்.

தேவையற்ற சர்ச்சை
நமது வீரமிக்க ராணுவத்தினர் நமது எல்லையை பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில், தேவையற்ற சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் ஒருமித்த ஆதரவை அரசுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளனர். இது போன்ற தூண்டுதல் பிரச்சாரங்களால் இந்திய மக்களின் ஒற்றுமை ஒருபோதும் பாதிக்கப்படாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications