Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவின் ‘வந்தேறி’ விமர்சனம்.. கொந்தளிக்குது மிசோரம்- பாஜக கூட்டணி கட்சி எம்.பி குமுறல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் வன்முறைக்கு மியான்மரில் இருந்து வந்தேறிய குக்கி இனமக்களே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து இப்போது மணிப்பூரில் மட்டுமல்ல மிசோரமிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மணிப்பூரின் குக்கி பழங்குடிகள், மிசோரம் மாநிலத்தின் பெரும்பான்மை மிசோ மக்களுடன் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். இதனால் இயல்பாகவே குக்கி இனமக்கள் படுகொலை செய்யப்படுகிற போது மிசோரம் மாநில அரசு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

Mizoram angry over Union Home Minsiter Amit Shahs infiltrators comments

அத்துடன் மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என பிரிவினைவாத அமைப்புகள் கெடுவிதித்தன. இதனால் மைத்தேயி மக்கள் கணிசமானோர் மிசோரமை விட்டுவெளியேறி அஸ்ஸாமில் தஞ்சமடைந்தனர். இதனையடுத்து அஸ்ஸாமில் இருந்து மிசோ மக்கள் வெளியேற அம்மாநில மாணவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலம் ஆதரவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது புதன்கிழமையன்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மியான்மர் நாட்டில் இருந்து ஊடுருவிய குக்கி இனமக்கள்தான் வன்முறைக்கு காரணம் என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மிசோ தேசிய முன்னணியின் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி வன்லால்வேனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்யசபாவில், நான் மிசோரமில் இருந்து வந்துள்ள பழங்குடி வகுப்பை சேர்ந்தவன். நாங்கள் அன்னிய நாட்டில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல. நாங்கள் மியான்மர் நாட்டு குடிமக்கள் அல்ல. நாங்கள் இந்தியர்கள்தான். நாடு விடுதலைக்கு முன்னரே வடகிழக்கு மாநிலங்களில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பழங்குடிகள் நாங்கள் என கடும் அமளிக்கு இடையே கூறியிருந்தார். ஆனால் அவரது மைக் துண்டிக்கப்பட்டு சபை குறிப்புகளில் இருந்து இந்த கருத்து நீக்கப்பட்டது. மேலும் மிசோரம் அமைப்புகளும் அமித்ஷாவின் வந்தேறி கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு வன்லால்வேனா எம்பி அளித்த பேட்டியில், ராஜ்யசபாவில் நான் பேசிய போது என்னுடைய மைக் துண்டிக்கப்ப்ட்டது. நான் பேசிய கருத்துகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+