இந்தியில் மோடி- முதல்வர்கள் வீடியோ கான்பரன்ஸ்... மொழி புரியாமல் அப்செட்டான மிசோரம் முதல்வர்
டெல்லி: பிரதமர் மோடி நடத்திய முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இந்தியில் மட்டும் நடைபெற்றதால் மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
Recommended Video
கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3-ந் தேதி வரை லாக்டவுன் அமலில் இருக்கும்.

இந்நிலையில் லாக்டவுன் நீட்டிப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று 4-வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முதல்வர்கள் மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடத்தப்பட்ட மாநில முதல்வர்கள் கூட்டத்தில் இந்தியில் மட்டுமே பிரதமர் மற்றும் முதல்வர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இதனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா அதிருப்தியை வெளிப்படுத்தினார். அனைவருமே இந்தியில் பேசியதால் எதுவுமே தமக்கு புரியவே இல்லை என ஆதங்கப்பட்டார் ஜோரம்தங்கா.












Click it and Unblock the Notifications