நாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்
டெல்லி: நாடு விடுதலை அடைந்த பின்னர் தேசத்தந்தை மகாத்மா காந்தி பாகிஸ்தானில் வசிக்க விரும்பியதாக முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தமது புதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.ஜே. அக்பர், Gandhi's Hinduism: The Struggle Against Jinnah's Islam என்ற தலைப்பில் புதிய புத்தகம் எழுதியுள்ளார்.

அதில், நாடு பிரிவினையின் போது இருதரப்பிலும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டது குறித்து மகாத்மா காந்தி பெரும் கவலை அடைந்தார். கிழக்கு பாகிஸ்தானில் நவகாளி சென்று மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்க விரும்பினார்.
1947-ம் ஆண்டு மே 31-ந் தேதி, பதான் தலைவரான அப்துல் காபர் கானிடம்(எல்லை காந்தி) நாடு விடுதலை அடைந்த பின்னர், பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் தாம் வசிக்க விரும்புகிறேன் என மகாத்மா காந்தி கூறினார் என எழுதப்பட்டுள்ளது.
மேலும் 1940-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு வரை நாடு பிரிவினை தொடர்பான குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் இந்த நூல் விவரிக்கிறது.












Click it and Unblock the Notifications