"சிம்லா ஸ்பெஷல்".. மோடி 2.0.. இன்றுடன் 3ம் ஆண்டு நிறைவு.. சிம்லாவில் பாஜக மாநாடு.. பிரதமர் பங்கேற்பு
சிம்லாவில் பாஜகவின் சிறப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
டெல்லி: மத்திய அரசின் 9 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 16 திட்டங்களின் மூலம் பயனடைந்த பொதுமக்களுடன், சிம்லாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
Recommended Video
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் தொடர்ந்து வந்த நிலையில், பாஜகவின் சார்பில் போட்டியிட்டு மோடி பிரதமரானார்.. தற்போது மோடி 2வது முறையாகவும் பிரதமராக பொறுப்பில் உள்ளார்..
முதலில், 2019ல் நடந்த தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 353 இடங்களை கைப்பற்றியது... பாஜக மட்டும் அப்போது 303 இடங்களை வென்று மாஸ் காட்டியது..

3வது ஆண்டு காலம்
அப்போது முதல் முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார்.. இதன்பிறகு, 2019-ல் நடந்த தேர்தலில் மறுபடியும் மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.. இந்த 2வது ஆண்டு ஆட்சிக்காலத்தின் 3வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.. 4-ம் ஆண்டில் மோடியின் ஆட்சி காலடி வைக்கிறது.. இந்நிலையில், இதை பாஜக சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன்படி, சிம்லாவில் பாஜகவின் சிறப்பு மாநாடு நடக்கிறது..

பிரச்சாரம்
இந்த விழாவின் மூலம், இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது... மொத்தமாக, இந்த 8 வருடங்கள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், மோடி அரசின் செயல்பாடுகளை சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பேரணியில் பங்கேற்கிறார்... இந்த விழாவை சிம்லாவில் நடத்த இன்னொரு காரணமும் உள்ளது..

சிம்லா பேரணி
இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் இங்கு நடைபெற உள்ளது.. இதுகுறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சொல்லும்போது, "பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிம்லாவில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... பிரதமர் மோடியும் இந்த பேரணியில் பங்கேற்கிறார். பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஒன்றிய அரசின் அமைச்சர்களும் விழாவில் காணொலி மூலம் பங்கேற்பார்கள்" என்றார்.

இலவச சமையல் எரிவாயு
அதேபோல, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் தாக்கம் குறித்து, பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் 11-வது தவணையாக ரூ.21,000 கோடி தொகையை பிரதமர் விடுவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications