இனி சீனாவின் ஆட்டம் க்ளோஸ்.. எகிறி அடிக்க ஆரம்பிக்கும் இந்தியா.. ரெடியாகும் பிரம்மாண்ட பிளான்!
டெல்லி: ரேர் எர்த் மெடல்களின் தேவை நவீன காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சீனாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் சூழலில், உலக நாடுகள் சீனாவை நம்பியே இருக்க வேண்டி உள்ளது. இதற்கிடையே சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மத்திய அமைச்சரவை இப்போது ஒரு முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது உலகில் வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களுக்கு ரேர் எர்த் மெடல்கள் முக்கிய தேவையாக இருக்கிறது. தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த உலகிற்குத் தேவையான ரேர் எர்த் மெடலும் சீனாவில் இருந்தே செல்கிறது. உலக வல்லரசான அமெரிக்கா கூட இதில் சீனாவையே நம்பி இருக்கிறது.

ரேர் எர்த் மெடல்
இதனால் சீனா திடீரென இதன் ஏற்றுமதிக்கு எதாவது கட்டுப்பாட்டை விதித்தால் அதன் பாதிப்பு உலகெங்கும் எதிரொலிப்பதாகவே இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கூட இப்படி தான் சீனா திடீரென சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் உலகெங்கும் அதன் பாதிப்பு எதிரொலித்தது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் தங்கள் உற்பத்தியையே நிறுத்தும் சூழல் கூட ஏற்பட்டது. அதன் பிறகே நிலைமை மெல்லச் சீரானது.
இப்படி ஒரே நாட்டை நம்பி இருக்கக்கூடாது என்பதால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. இதற்கிடையே இப்போது ரேர் எர்த் மெடல் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவை நம்பி இருப்பதைத் தவிர்க்க இது கை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு
இந்த திட்டத்திற்காக, மத்திய அரசு ₹7,280 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ரேர் எர்த் மெடல்களை உற்பத்தி செய்யத் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரேர் எர்த் மெடல்களை வெட்டி எடுப்பது முதல் அதை தொழில்துறைக்கு ஏற்ற வகையில் மாற்றுவது வரை எல்லாவற்றையும் இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..
இப்போது இந்தியாவின் ரேர் எர்த் மெடல் தேவை கிட்டத்தட்ட 100% இறக்குமதி தான் செய்யப்படுகிறது. அந்த நிலையை மாற்றுவதே இதன் நோக்கமாகும். 2030ஆம் ஆண்டுக்குள் ரேர் எர்த் மெடல் தேவை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்நாட்டு சப்ளையை உறுதிப்படுத்தவும் எதிர்காலத்தில் இக்கட்டான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்கவுமே மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
என்ன திட்டம்
தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ரூ.7280 கோடியில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.6,450 கோடி ஒதுக்கப்படும். மேலும், ஆபரேஷன் செலவுகளுக்கு ரூ.800 கோடி வழங்கப்படும். அதாவது ரேர் எர்த் மெடல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த ஊக்க தொகை வழங்கப்படும். சர்வதேச அளவில் ஏலம் நடத்தப்பட்டு, ஐந்து நிறுவனங்களுக்கு இந்த திட்டம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக 1,200 மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும்.
மொத்தம் ஏழு ஆண்டுகள்
இந்த திட்டம் மொத்தம் ஏழு ஆண்டுகள் செயல்படுத்தப்படும். இதில் ஆலைகளை அமைப்பதற்கான இரண்டு ஆண்டுகளும், சலுகைகளை வழங்குவதற்கான ஐந்து ஆண்டுகளும் அடங்கும். ரேர் எர்த் மெடல்களை எடுக்க ஆகும் செலவுகளில் கணிசமான தொகையை அரசு மானியமாக வழங்கிவிடுவதால்.. இனி பல தனியார் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது.
-
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications