Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய்லாந்து சென்ற புத்தரின் நினைவு சின்னங்கள்.. அரசு விருந்தினராக கவுரவிப்பு! நெகிழ்ந்துபோன மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிலிருந்து புத்தரின் நினைவு சின்னங்கள் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஆன்மீக பாலமாக இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

புத்தரின் எலும்பு துண்டுகள் இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நினைவு சின்னங்களை இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்து பாதுகாத்து வருகிறது. இந்த புனித நினைவுச்சின்னங்களின் தொகுப்பின் பகுதிகள் கடந்த 1976 மற்றும் 2012ம் ஆண்டு இலங்கைக்கும், 1993 மற்றும் 2022ம் ஆண்டு மங்கோலியாவிற்கும், 1994 மற்றும் 2007ம் ஆண்டு சிங்கப்பூருக்கும், 1995ம் ஆண்டு தென் கொரியாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

Modi is proud that Buddha memorials will improve Thailand-India relations

இதன் தொடர்ச்சியாக தற்போது தாய்லாந்துக்கு இந்த புனித நினைவுச் சின்னம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் கடைசியாக கடந்த 1995ம் ஆண்டு தாய்லாந்திற்கும் இது அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது 29 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் இந்த சின்னம் மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 22ம் தேதி 22 பேர் கொண்ட தூது குழுவுடன் இந்திய விமானப்படை விமானத்தில் இந்த புனித சின்னங்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இது தாய்லாந்தில் பாங்காக்கின் சனம் லுவாங் பெவிலியனில் 11 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும். அதன் பிறகு, சியாங் மாய், உபோன் ராட்சதானி மற்றும் இறுதியாக கிராபியில் காட்சிக்கு வைக்கப்படும். தாய்லாந்தில் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால், இந்த புனித சின்னத்திற்கு அந்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பளித்துள்ளனர்.

புத்தரின் நினைவு சின்னங்கள் மட்டுமின்றி, புத்தரின் சீடர்களான அரஹத சாரிபுத்தா மற்றும் அரஹத மௌத்கலயனா ஆகியோரின் நினைவுச்சின்னங்களும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நினைவு சின்னங்களுக்கு தாய்லாந்து நாட்டு அரசு, 'அரசு விருந்தினர்' மரியாதையை கொடுத்திருக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில், நினைவு சின்னங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல்துறை தெரிவித்திருக்கிறது. தாய்லாந்தில், கடந்த 23ம் தேதி முதல் 3ம் தேதி வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பௌத்தர்கள் இந்த நினைவு சின்னங்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “புத்தரின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஆன்மீகப் பாலமாக விளங்குகின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை இது வளர்க்கிறது. பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் வளமான அனுபவம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+