டெல்லியில் 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! உலகிற்கு கூட்டாக மோடி - புதின் சொன்ன மெசேஜ்!
டெல்லி: டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே, சுகாதார நலன், துறைமுகம், கப்பல் போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு தொடர்பாக 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
2 நாள் அரசுமுறை பயணமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பின், இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே, துறைமுகம், கப்பல் போக்குவரத்து தொடர்பாகவும், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, அறிவியல் தொடர்பாகவும், இந்தியா- ரஷ்யா இடையே பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஷ்ய குடிமக்களுக்கு இந்தியா விரைவில் இலவச 30 நாள் இ-சுற்றுலா விசா மற்றும் 30 நாள் குழு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். சர்வதேச பிக் கேட் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ரஷ்ய தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு முறைப்படி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்ற புடின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியா - ரஷ்யா இடையே கடந்த 80 ஆண்டுகளாக ஆழமான நட்புறவு நீடித்து வருகிறது. இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு ஒப்பந்தங்களை இறுதி செய்யவும், ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு நடக்கிறது. அதன்படி நேற்று நடந்த 23வது உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்திலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். அதன்பின், நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ சென்றார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications