ஜப்பான் இந்தியா இடையே 5ஜி தொழில்நுட்பம்.. அடுத்த மாதம் ஜப்பானில் குவாட் நாடுகள் சந்திப்பு!!
டெல்லி: இந்தியாவுடன் இணைந்து 5G மற்றும் 5G plus தொழில்நுட்பங்களில் ஈடுபட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதன்படி குவாட் கூட்டு நாடுகளில் (QUAD) இடம் பெற்று இருக்கும் நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்திய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் ஜப்பானில் கூடுகின்றனர்.
ஜப்பானின் இந்த முடிவை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இந்தியா 3GPP அம்பிரல்லா மொபைல் தொழில்நுட்ப தரத்தை உயர்த்தவும், இந்திய கிராமங்களில் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் அதிகளவில் 3GPP தொழில்நுட்ப தரத்தைக் கொண்டுள்ளன,

ஜப்பான் புதிய பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேசினார். அப்போது இருநாடுகள் ஒத்துழைப்பு மற்றும் உலகளவில் இரண்டு நாடுகளின் கூட்டளிப்பு குறித்து உரையாடினர். 5G மற்றும் 5G plus தொழில்நுட்பம் குறித்து இந்தியப் பிரதமரிடம் சுமா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் சுதந்திரமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் மூன்று நாடுகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று சுகா கூடுதலாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டு தொழில்நுட்பத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவும் இணைந்து கொள்ள உள்ளன.
இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஜப்பானிய தற்காப்புப் படைகள் மற்றும் இந்திய ஆயுதப்படைகள் தங்களுக்குள் பொருட்கள் மற்றும் போக்குவரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்படி, வரும் நவம்பர் மாதம் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்து கடற்படை பயிற்சியில் ஈடுபட இருக்கிறது.
இதற்கிடையே சென்காகு தீவில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால், ஜப்பான் பாதுகாப்புத்துறைக்கு என்று அதிக நிதியை ஒதுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவும் எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications