எமனாக மாறிய.. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்! குழந்தைகள் பலி 20 ஆக அதிகரிப்பு
டெல்லி: தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்ததால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே 14 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது 20ஆக அதிகரித்திருக்கிறது.
உயிரிழந்த 20 குழந்தைகளில், 17 பேர் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெதுலை பகுதியை சேர்ந்த இருவர், பாண்டூர்ணாவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் ராஜேந்திர சுக்லா கூறுகையில், "சிகிச்சை பெற்று வந்த சில குழந்தைகள் குணமடைந்த போதிலும், செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு குழந்தைகளும், திங்கள்கிழமை இரவு ஒரு குழந்தையும் உயிரிழந்தன. முன்னதாக 17 குழந்தைகள் இறந்திருந்தன. தற்போது 5 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றன" என கூறியிருக்கிறார்.

ஐந்து குழந்தைகள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், இருவர் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் மற்றும் சளி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 'கோல்ட்ரிஃப்' சிரப்பைக் குடித்த பிறகு வாந்தி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர். முதல் உயிரிழப்பு செப்டம்பர் 2 அன்று பதிவானது. இந்த சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 'ஸ்ரீசன் ஃபார்மசூட்டிகல்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
உயிரிழப்பு சம்பவத்தையடுத்து, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி என எட்டு மாநிலங்களில் இந்த மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 2 அன்று, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர், கோல்ட்ரிஃப் மாதிரிகள் தரமற்றவை என்பதைக் கண்டறிந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் மாதிரியில் 48.6% டைஎத்திலீன் கிளைக்கால் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற இருமல் மருந்துகளில், டைஎத்திலீன் கிளைக்காலின் 0.1% மட்டுமே கலந்திருக்க வேண்டும்.
மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், "சிறிதளவு டைஎத்திலீன் கிளைக்கால் கூட ஆபத்தானது. அதுவும் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்துகளில் இது முற்றிலும் இருக்கக்கூடாது. குறிப்பாக குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் மருந்தில், டைஎத்திலீன் கிளைக்கால் கலக்கப்பட்டிருப்பது மருந்து தரத்தில் கடுமையான விதிமீறல்" என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து மற்ற மருந்துகளையும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டுத் துறை சோதனை செய்தது. சோதனையில் மேலும் இரண்டு இருமல் மற்றும் சளி சிரப்களில் - 'ரிலைப் சிரப்' மற்றும் 'ரெஸ்பிஃப்ரெஷ் டிஆர்' - டைஎத்திலீன் கிளைக்கால் கலந்திருப்பதைக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவையும் தரமற்றவை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications