ராணுவத்தில் தோனி வகித்து வரும் பதவி.. ஒவ்வொரு மாதமும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்!
டெல்லி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் கர்னல் கவுரவ பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தோனி மீண்டும் ராணுவ பணிகளில் ஈடுபடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்னொரு பக்கம் கர்னல் பதவிக்காக தோனி பெறும் ஊதியம் எவ்வளவு என்றும் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடி தாக்குதலை நடத்தியது. அப்போது போர் பதற்றம் கூடுதலாக அதிகரித்தால், தோனி இந்திய ராணுவத்துடன் இணைவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

ஏனென்றால் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற பின் கேப்டன் தோனிக்கு லெஃப்டினண்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது. அதன்பின் 2015ஆம் ஆண்டு தோனி தனது ஓய்வு நேரத்தில் இருந்த போது, இந்திய ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். பாராசூட் பயிற்சியில் கூட ஈடுபட்டார்.
இதன்பின் 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் சில வாரங்களில் ராணுவ வீரர்களுடன் இணைந்து பணியாற்றினார். பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட தோனி, ராணுவ உடையில் ஏகே 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, ஹெல்மெட், கையெறி குண்டுகள் என்று அத்தனை உடுப்புகளை அணிந்து பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் தென் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது சக வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியது. அதேபோல் 106 பாராசூட் ரெஜிமெண்டில் பணியாற்றிய தோனி, 5 முறை பாராசூட் ஜம்ப் செய்து பாராசூட் ட்ரூப்பராக தகுதி பெற்றார். அதேபோல் தோனி வகித்து வரும் லெஃப்டினண்ட் கர்னல் பதவிக்கு ரூ.1.21 லட்சம் முதல் ரூ.2.12 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும். ஆனால் தோனி இந்த சம்பளத்தை பெற முடியாது.
ஏனென்றால் தோனிக்கு இந்திய ராணுவத்தில் அளிக்கப்பட்ட பொறுப்பு கவுரவ பதவிதான். கவுரவ பதவிகளில் இருப்பவர்கள் இயல்பான கடமையையோ, பணிகளையோ செய்வதில்லை. அதேபோல் ராணுவம் மூலமாக மக்கள் சேவையையும் செய்வதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
இளைஞர்கள் மத்தியில் இந்திய ராணுவத்தின் பெருமையை எடுத்து செல்லவும், ராணுவத்தில் இணைய ஊக்கப்படுத்தவும் நட்சத்திரங்களுக்கு கவுரவ பதவிகள் அளிக்கப்படுவது வழக்கம்தான். இதனால் ஊதியம் என்ன என்பது கூறப்பட்டாலும், அவர்களுக்கு அந்த ஊதியத்தை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications