இந்திய பெருங்கடல் பகுதி நாடுகள் அனைத்தும் இந்தியாவுடன் இணைய வேண்டும்.. ஆர்எஸ்எஸ் அதிரடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை 'இந்தியாவின் தந்தை' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்ததில் இருந்தே, ஒரு புதிய சர்ச்சை தொடங்கியுள்ளது.
இந்த சர்ச்சையில் ஆர்எஸ்எஸ்சும் இப்போது களமிறங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் இதுதொர்பாக அளித்துள்ள பேட்டியை பாருங்கள்.

70 ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 72 ஆண்டுகளாகவே, எந்த ஆதாரமும் இல்லாமல் காந்தி பழைய தேசத்தின் தந்தை என்று கருதினோம். இப்போது அதை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள். அது உங்கள் விருப்பம்.
இந்தியாவுக்கு ஒரு புதிய தந்தை உருவாகியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மோடிதான் புதிய இந்தியாவின் தந்தை என்று கூறினார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் யாருடன் போராடுவீர்கள்? சில நேரங்களில் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் உருவாகும்போது, 350 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சுற்று பகுதி பிராந்தியம் ஏன் ஒரு வலுவான அமைப்பாக உருவாக முடியாது? இந்தியப் பெருங்கடலுடன் தொடர்புடைய நாடுகளுக்கிடையிலான உறவு பண்டைய காலங்களிலிருந்தே உள்ளது. இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இந்தியா என்று அழைக்கப்பட்டன, இப்போது மீண்டும் அவை அனைத்தும் சேர்ந்து, இந்தியா என்று அழைக்கப்படும் நேரம் வந்துவிட்டது.
இது புதிய இந்தியா, வன்முறை, படுகொலை, மத பாகுபாடு, பெண்களைச் சுரண்டல் இல்லாமல் விடுதலையின் பாதையைக் காண்பிப்பது, ஆகியவை நடைபெறும் இந்தியா இது. உலகமே ஒரே குடும்பம் என நம்பும் இந்தியா இது. 8 கோடி பெண்கள் முத்தலாக் விவாகரத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போல, பல கோடி முஸ்லிம்களை அழிவிலிருந்து காப்பாற்றப்போகும் இந்தியா இது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி நாட்டை ஒன்றிணைத்துள்ளோம். எனவேதான், நவீன இந்தியாவின் தந்தை என பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை 'இந்தியத் தந்தை' என்று அழைத்ததற்கு, ஒவைசி அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தார். ஓவைசி கூறுகையில், "அதிபர் டிரம்பிற்கு இந்திய சுதந்திர ஆண்டு குறித்து எந்த விவரமும் தெரியாது. அவர் மோடிக்கு இப்படி ஒரு பட்டம் கொடுக்கிறார். பிரதமர் மோடி தேசத்தின் தந்தையாக இருக்க முடியாது, ஏனெனில் மகாத்மா காந்தி இந்த பட்டத்தை வகித்துக்கொண்டிருக்கிறார். தேச தந்தையுடன் மோடியை ஒப்பிட முடியாது. ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் போன்ற மூத்த தலைவர்களுக்கு கூட இந்த பட்டம் வழங்கப்படவில்லை" என்று ஒவைசி கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியைப் பாராட்டியதாகவும், அதில் யாராவது பெருமைப்படவில்லை என்றால், அவருக்கு இந்தியர் என்று அழைக்க உரிமை இல்லை என்று மத்திய அமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார். "இந்த பட்டம் மீது காங்கிரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அவர்கள் டொனால்ட் டிரம்புடன் பேச வேண்டும். பிரதமரை கவுரவிக்கும் வார்த்தைகளில் காங்கிரஸ் பெருமிதம் கொள்ளவில்லை. அப்படி யாராவது பெருமிதம் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு இந்தியர் என்று அழைக்கப்படுவதற்கான உரிமை இல்லை. "அவர் கூறினார்,
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications