செமையான பட்ஜெட்ங்க...விவசாயிகள் வருமானம் உயர கவனம் செலுத்தியிருக்காங்க... பாராட்டி தள்ளிய மோடி!
டெல்லி: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.என்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய பட்ஜெட்டை பாராட்டி பேசினார்.
இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி. உள்கட்டமைப்பு அதிகரிக்க வழிவகை செய்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
நாட்டின் கடினமான சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கல்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

தேர்தலை மனதில் வைத்து திட்டம்
கொரோனா அச்சம் நாட்டை சூழ்ந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் சட்டசபை தேர்தல்களை மனதில் வைத்து அந்த மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொலைநோக்கு பார்வை இருக்கு
இந்த நிலையில் இந்த பட்ஜெட் நாட்டின் எதிர்கால காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- நாட்டின் கடினமான சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும். பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வை உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள், உள்கட்டமைப்புக்கான புதிய பகுதிகள் பற்றிய ஒரு யோசனை உள்ளது. அனைத்து துறையின் மேம்பாட்டு பட்ஜெட் இதுவாகும்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்
இந்த பட்ஜெட்டில் அரசு பொதுமக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்று பல வல்லுநர்கள் நினைத்திருந்தனர். நாங்கள் இந்தியாவுக்கு ஒரு சார்பு பட்ஜெட்டை வழங்கியுள்ளோம். இந்த பட்ஜெட்டின் உதவியுடன் செல்வமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும், இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி. உள்கட்டமைப்பு அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் கிராமமும், விவசாயிகளும் இந்த பட்ஜெட்டின் இதயத்தில் இருப்பதைக் காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications