சூப்பர் தகவல்:தமிழக வேலைவாய்ப்பின்மை 4.1%ல் இருந்து 3.2% ஆக குறைந்தது-ஹரியானாவில் தலைவிரித்தாடுகிறது
டெல்லி: தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 4.1%-ல் இருந்து 3.2% ஆக குறைந்திருப்பதாக இந்திய பொருளாதார ஆய்வு நிறுவனம் Monitoring Indian Economy (CMIE) தெரிவித்துள்ளது.
Monitoring Indian Economy (CMIE) நிறுவனம் வெளியிட்டு தரவுகள் விவரம்: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது மார்ச் மாதத்தில் 7.60% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 7.83% ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே ஹரியானாவில்தான் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 34.5% ஆக உள்ளது; இதற்கு அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 28.8% ஆக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் 4.1% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரலில் 3.2% ஆக குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையானது மார்ச் மாதத்தில் 8.28% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 9.22% ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் ஊரகப் பகுதிகளில் மார்ச் மாதம் 7.29% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரலில் 7.19% ஆக குறைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 15.6% என உள்ளது.. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவு.
மத்திய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி முக்கிய துறைகளின் வேலைவாய்ப்பு தொடர்பான காலாண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட 9 துறைகளில் மொத்தம் 4,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பிரிவில் இந்த ஒன்பது துறைகள் மொத்த வேலைவாய்ப்பில் 85 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
அதேபோல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் உற்பத்தி துறை 39% உடன் முதல் இடத்திலும், கல்வி துறை 22% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஏறக்குறைய அனைத்து (99.4%) நிறுவனங்களும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 23.55% நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வேலையில் பயிற்சி அளித்தன என்றும் மத்திய அரசின் காலாண்டு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications