அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வு கட்டணத்தை உயர்த்தியது தேசிய தேர்வு முகமை
டெல்லி: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
நாடு முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேசிய தேர்வு முகமை மூலமாக தேர்வை நடத்தி வருகிறது.

நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது.
அதன்படி, ஜூலை 17ம் தேதி நீட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்றும், ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 7ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக் கட்டணத்தை தேசிய தேர்வு முகமை உயர்த்தி இருக்கிறது.
அதன்படி, பொதுப் பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600-ஆகவும், இதர பிற்படுத்தப்பட்டோர், EWS பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400 ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications