‛‛பாஜகவை மிரட்டும் ‛இந்தியா’ கூட்டணி’’.. லோக்சபா சபாநாயகர் தேர்தலில் பெரிய ட்விஸ்ட்! கலங்கும் மோடி
டெல்லி: லோக்சபா சபாநாயகரை பதவிக்கு பாஜக கூட்டணியில் பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இடையே போட்டி உள்ளது. இதற்கிடையே தான் சபாநாயகர் பதவி தொடர்பாக பாஜக கூட்டணியை எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி மிரட்டி பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை.
370 தொகுதிகளில் வெல்வோம் என்று இலக்கு நிர்ணயித்த பாஜகவுக்கு இந்த லோக்சபா தேர்தலில் பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது. ஏனென்றால் பாஜக 240 தொகுதகிளில் மட்டுமே வென்றது. இதனால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது.

இதனால் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் களமிறங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 16 எம்பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்பிக்கள் உள்பட 52 எம்பிக்களின் தயவில் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதோடு 3வது முறையாக மீண்டும் நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார்.
கடந்த 2014, 2019 தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கினாலும் கூட அந்த கட்சிக்கு லோக்சபாவில் தனி மெஜாரிட்டி என்பது இருந்தது. ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் மாறிப்போய் உள்ளது. வரும் 5 ஆண்டுகள் பாஜக மத்தியில் ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளை நம்பி தான் இருக்க வேண்டும். இதையடுத்து தான் கூட்டணி கட்சிகளுக்கு இந்த முறை மத்திய அமைச்சரவையில் கடந்த 2 முறையை காட்டிலும் அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஒருவழியாக பாஜக, தனது கூட்டணி கட்சிகளை சமாளித்து மத்திய அமைச்சரவையை அமைத்துவிட்டது. அடுத்ததாக பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் இருக்கும் பெரிய சவால் என்பது லோக்சபா சபாநாயகர் பதவியாகும். இந்த பதவி என்பது மிகவும் முக்கியம். அதாவது லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு, கட்சித்தாவல் தடை சட்டத்தின் மீது ஒரு எம்பி மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய அதிகாரம் சபாநாயகரிடம் தான் இருக்கும்.
இன்னும் ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் மத்திய பாஜகவின் ஆட்சியின் பெரும்பான்மைக்கு சிக்கல் ஏற்படும்போது ஆட்சியை கவிழ்ப்பது மற்றும் காப்பாற்றும் அதிகாரம் என்பது சபாநாயகருக்கு தான் இருக்கும். இதனால் தான் இந்த சபாநாயகர் பதவி மீது பாஜக கூட்டணியில் பாஜக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் குறிவைத்துள்ளன. ஆனால் பாஜக சபாநாயகர் பதவியை தக்கவைத்து கொள்ள விரும்புகிறது. அதோடு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை சமதானப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் சபாநாயகர் பதவி விவகாரத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு காரணம் ‛இந்தியா' கூட்டணியாகும். அதாவது எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு தற்போது லோக்சபாவில் 234 எம்பிக்கள் உள்ளன. இதனால் துணை சபாநாயகர் பதவியை பெற ‛இந்தியா' கூட்டணி விரும்புகிறது. ஆனால் பாஜகவோ சபாநாயகர் பதவியை தாங்களும், துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தான் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் லோக்சபா சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என ‛இந்தியா' கூட்டணி பாஜகவை மிரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் போட்டியின்றி சபாநாயகரை தேர்வு செய்து விடலாம் என்று பாஜக கருதி வந்த நிலையில் ‛இந்தியா' கூட்டணியின் இந்த முடிவு பாஜகவை கலங்க வைத்துள்ளது.
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை தொடர்ந்து முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். அதன்பிறகு ஜுன் 26ம் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினால் தேர்தல் நடத்தப்படும். எதிர்க்கட்சிகள் வேட்பாளர் நிறுத்தாவிட்டால் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியின்றி ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்யும். இத்தகை சூழலில் தான் துணை சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்காவிட்டால் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளரை களமிறக்குவோம் என எதிர்க்கட்சிகள் பாஜக மிரட்ட திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications