பாரத் ஜோடா யாத்திரையால் திருப்பம்.. ராகுல் காந்தியை அதிகம் விரும்பும் மக்கள்.. என்டிடிவி சர்வே
டெல்லி: பாரத் ஜோடோ யாத்திரைக்கு பிறகு காங்கிரஸின் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மறையாமல் உள்ளது என்று என்டிடிவி கூறியுள்ளது. சிஎஸ்டிஎஸ் உடன் இணைந்து நடத்திய சிறப்பு சர்வே முடிவுகளை என்டிடிவி வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
பிரதமர் மோடி இந்த மாதம் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரப்போகிறது. அதற்கு முன்பு மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறத. இந்நிலையில் பொதுமக்களின் மனநிலையை மதிப்பிட இந்த சர்வே மூலம் என்டிடிவி முயற்சித்தது.

கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸிடம் தோல்வியடைந்ததை அடுத்து, மே 10 முதல் 19 வரை 19 மாநிலங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது. லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் 71 தொகுதிகளில் 7,202 பேரிடம் கணக்கெடுப்பை மேற்கொண்டது.
என்டிடிவியின் சர்வேயில் பதிலளித்தவர்களில் 43 சதவீதம் பேர் இன்று தேர்தல் நடந்தால், நரேந்திர மோடி தான் பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேநேரம் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று 27 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.
பிரதமர் மோடியை அவரது பேச்சாற்றலால் 25 சதவீதம் பேரால்வ மிகவும் விரும்பப்படுகிறார். பதிலளித்தவர்களில் 20% பேர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பிரதமராக அவரை விரும்புவதாகவும், 13% பேர் அவர் கடின உழைப்பாளி என்பதால் பிரதமரை விரும்புவதாகவும் கூறியுள்ளனர். சுமார் 11% பேர் அவருடைய கொள்கைகளைப் பாராட்டியுள்ளனர்.

2024ல் பிரதமர் மோடிக்கு யார் சவாலாக இருப்பார்கள் என்று சர்வேயில் பதிலளித்தவர்களிடம் கேட்கப்பட்டது. 34% பேர் ராகுல் காந்தி என்றும், 11% பேர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் கூறியுள்ளனர். அகிலேஷ் யாதவ் (5%) மற்றும் மம்தா பானர்ஜி (4%) என்றும் சிலர் கூறினர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 9 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு சவாலாக யாருமே இல்லை என்றுகூறினர்.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, 26% பேர் "எப்போதும் அவரை விரும்புவதாக" கூறியுள்ளனர், 15% பேர் பாரத் ஜோடோ யாத்ராவிற்குப் பிறகு விரும்புவதாக கூறினர். 16% பேர் ராகுலை பிடிக்கவில்லை என்றும், 27 சதவிகிதம் பேர் நடுநிலை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்வேயில், பாஜகவின் வாக்கு சதவீதம் 2019 (37%) இலிருந்து 2023 (39%) ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸின் - 2019 இல் 19% முதல் 2023 இல் 29% ஆக உயர்ந்துள்ளது.
-
நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications