நீட் தேர்வு.. நாடு முழுக்க 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. தமிழகத்தில் சரிந்த எண்ணிக்கை.. ஷாக்கிங்
டெல்லி: நாடு முழுக்க இந்த முறை நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
பெரும் எதிர்ப்புக்கும், எதிர்பார்ப்பிற்கும் இடையே நாடு முழுக்க இன்று நீட் தேர்வுகள் நடக்கிறது. கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வுகள் நடக்க உள்ளது, மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான் உட்பட 6 மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடுத்த உச்ச நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடக்க உள்ளது.

எப்போது தேர்வு
மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு நடக்கும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது. மதியம் 1.30 மணி வரை மாணவர்கள் நீட் தேர்வு அறைக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்திலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

சென்னை நிலை
சென்னையில் மொத்தம் 46 மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது. இந்த வருடம் நீட்டிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளது.

தமிழகம் எப்படி
கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த வருடம் இதில் 17% குறைந்துள்ளது. ஆம் சென்ற வருடத்தை விட இந்த வருடம் நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது.இந்த ஆண்டு 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்.

இன்று எத்தனை
நாடு முழுக்க 3843 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 2546 ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு தேர்வு அறையில் 12 பேர் தேர்வு எழுதுவார்கள். நீட் தேர்வை எழுத வசதியாக மாணவர்களாக நாடு முழுக்க சில சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications