ஒரே நேரத்தில் நீட் தளத்தில் குவிந்த மாணவர்கள்.. நீட் இணையதளம் தளம் முடங்கியது
டெல்லி: ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் நீட் தேர்வு இணையதளம் சற்று நேரம் முடங்கியது. இருப்பினும், சில நிமிடங்களிலேயே அந்த தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு தான் மூலம் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் 155இல் இருந்து 198ஆக அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு நீட் தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது. இருப்பினும், ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் சற்று நேரம் neet.nta.nic.in தளம் முடங்கியது.
இருப்பினும், சில நிமிடங்களிலேயே அந்த தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்திருந்த ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications