வருமான வரி சட்டம்.. ரீபண்ட் விதிகளில் மாற்றம்? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? புதிய ரூல்ஸ் என்ன
டெல்லி: மத்திய அரசு இப்போது புதிதாக வருமான வரி மசோதா 2025ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.. இந்த புதிய வருமான வரி சட்டம் பழைய சட்டத்தை விட எளிமையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வருமான வரியைத் தாக்கல் செய்து ரீபண்ட் பெறுவது தொடர்பாக வருமான வரித்துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்யும் முறையை எளிமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.

ஏற்கனவே உள்ள பழைய வருமான வரி சட்டம் சிக்கலாக இருப்பதால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிவதில்லை என்ற புகார் இருந்தது. இந்த சிக்கலைச் சரி செய்யும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் புதிய வருமான வரி சட்டத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய வருமான வரி சட்டம்
இந்த புதிய வருமான வரி சட்டம் தொடர்பாக மக்களுக்குப் பல கேள்விகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஐடிஆர் எனப்படும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது. அதாவது வருமான வரிக் கணக்கை (ITR) கடைசி தேதிக்கு முன்பு தாக்கல் செய்யாவிட்டால்.. அவர்களால் ரீபண்ட் பெற முடியாது என்று சொல்லி தகவல் பரவியது. ஒரு வேளை மிஸ் செய்துவிட்டால் ரீபண்ட் கிடைக்காதோ என மக்கள் பயந்துவிட்டனர்.
ரீபண்ட் விதிகள்
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "புதிய வருமான வரி சட்டம் ரீபண்ட் பெற விரும்புவோர் நிச்சயம் கடைசி தேதிக்குள் வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாக உள்ளது. அதற்குள் தாக்கல் செய்தால் மட்டுமே ரீபண்ட் கிடைக்கும்.
பழைய வருமான வரி சட்டத்தில் ஒருவர் கடைசி தேதியைத் தவறவிட்டாலும் கூட டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்து ரீபண்ட் வாங்கலாம் என்று இருந்தது. ஆனால், அதை புதிய சட்டத்தில் மாற்றியுள்ளனர். எனவே, யாராவது கடைசி தேதியை மிஸ் செய்தால் அது ரீபண்ட் பெற முடியாது. எனவே, இது சிக்கலைத் தரும்" என்று தெரிவித்தார்.
விளக்கம்
இதற்கிடையே வருமான வரித் துறை சார்பில் இது தொடர்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ரீபண்ட் விதிகள் குறித்து எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் வழக்கமான நடைமுறையே தொடரும் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது ரீபண்ட் எந்த விதிகளின் கீழ் பிராசஸ் செய்யப்படும் என்பது தான் மாற்றப்பட்டுள்ளதே தவிர மசோதாவில் ரீபண்ட் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் நிறைவேறும் போது எப்படி இருக்கும்
அதாவது வருமான வரியைக் கடைசி தேதிக்குப் பிறகுத் தாக்கல் செய்தாலும் ரீபண்ட் பெறும் வகையிலேயே புதிய சட்டம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. அது கடைசியாகத் தாக்கலாகும் போது பல திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். எனவே, கடைசியாக நிறைவேறும் சட்டத்தில் என்ன விதிகள் இருக்கிறதோ.. அதன் அடிப்படையிலேயே ரீபண்ட் எல்லாம் பிராசஸ் செய்யப்படும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications