குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!
டெல்லி: இனி வீட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு இருந்தால், அவர்கள் வீட்டு உபயோக LPG சிலிண்டர் இணைப்பை வைத்திருக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, ஒரு நபரிடம் PNG இணைப்பும், அதே சமயம் வீட்டு உபயோக LPG சிலிண்டர் இணைப்பும் இருந்தால், அவர் உடனடியாக தனது LPG சிலிண்டர் இணைப்பைச் சரண்டர் செய்ய வேண்டும். அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்தோ அல்லது விநியோகஸ்தர்களிடம் இருந்தோ இனி சிலிண்டர் ரீஃபில் பெற கூடாது.
அதேபோல, எந்தவொரு அரசு எண்ணெய் நிறுவனமும் (IOCL, BPCL, HPCL), ஏற்கனவே PNG இணைப்பு வைத்திருக்கும் ஒரு நுகர்வோருக்குப் புதிய LPG இணைப்பையோ அல்லது சிலிண்டர் ரீஃபில்களையோ வழங்கக்கூடாது என இந்த ஆணை உத்தரவிட்டிருக்கிறது.
ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. எனவே ஒரு புக்கிங்கிற்கும் இன்னொரு புக்கிங்கிற்குமான இடைவெளி காலம் 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications