Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிறுபான்மையினர் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான பாகுபாடு, தாக்குதல் வழக்குகளின் எண்ணிக்கையை, மாநில வாரியாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி) கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பதிவு செய்துள்ள வழக்குகளில், வடகிழக்கு மாநிலங்களில் தான், மிகக் குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

NHRC Register case: Discrimination against minorities and scheduled castes

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பாக, 79 வழக்குகளையும், பட்டியல் சாதியினருக்கு (எஸ்.சி) எதிரான பாகுபாடு தொடர்பாக 672 வழக்குகளையும் என்.எச்.ஆர்.சி பதிவு செய்துள்ளது.

முந்தைய, 2017-18 ஆம் ஆண்டில் மொத்த வழக்குகள் 464 ஆக இருந்தது. இது 2016-17 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 505 வழக்குகளில் இருந்து சற்று குறைவு. இந்தநிலையில், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும், உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட பாதி (311) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், எஸ்.சி.க்களுக்கு எதிரான 99 துன்புறுத்தல் வழக்குகள் ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 வழக்குகள் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம்.பி கே.நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு, மக்களவையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+