2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: சிறுபான்மையினர் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான பாகுபாடு, தாக்குதல் வழக்குகளின் எண்ணிக்கையை, மாநில வாரியாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி) கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பதிவு செய்துள்ள வழக்குகளில், வடகிழக்கு மாநிலங்களில் தான், மிகக் குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பாக, 79 வழக்குகளையும், பட்டியல் சாதியினருக்கு (எஸ்.சி) எதிரான பாகுபாடு தொடர்பாக 672 வழக்குகளையும் என்.எச்.ஆர்.சி பதிவு செய்துள்ளது.
முந்தைய, 2017-18 ஆம் ஆண்டில் மொத்த வழக்குகள் 464 ஆக இருந்தது. இது 2016-17 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 505 வழக்குகளில் இருந்து சற்று குறைவு. இந்தநிலையில், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும், உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட பாதி (311) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், எஸ்.சி.க்களுக்கு எதிரான 99 துன்புறுத்தல் வழக்குகள் ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 வழக்குகள் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம்.பி கே.நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு, மக்களவையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications