2018-19 ல் ரொம்ப அதிகம்... சிறுபான்மையினர், எஸ்.சி.க்களுக்கு எதிரான தாக்குதல்.. ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: சிறுபான்மையினர் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான பாகுபாடு, தாக்குதல் வழக்குகளின் எண்ணிக்கையை, மாநில வாரியாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் (என்.எச்.ஆர்.சி) கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பதிவு செய்துள்ள வழக்குகளில், வடகிழக்கு மாநிலங்களில் தான், மிகக் குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பாக, 79 வழக்குகளையும், பட்டியல் சாதியினருக்கு (எஸ்.சி) எதிரான பாகுபாடு தொடர்பாக 672 வழக்குகளையும் என்.எச்.ஆர்.சி பதிவு செய்துள்ளது.
முந்தைய, 2017-18 ஆம் ஆண்டில் மொத்த வழக்குகள் 464 ஆக இருந்தது. இது 2016-17 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 505 வழக்குகளில் இருந்து சற்று குறைவு. இந்தநிலையில், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும், உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட பாதி (311) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், எஸ்.சி.க்களுக்கு எதிரான 99 துன்புறுத்தல் வழக்குகள் ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 வழக்குகள் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம்.பி கே.நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு, மக்களவையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications