புல்வாமாவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம் தந்த தந்தை- மகள் கைது
ஶ்ரீநகர்: நாட்டை உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் தந்தை மற்றும் மகள் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி புல்வாமாவில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் வென்ற வாகனம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

தேசத்தையே உலுக்கியது இந்த கொடூர தாக்குதல். புல்வாமாவில் மனித வெடிகுண்டா செயல்பட்டு தாக்குதல் நடத்தியது அடில் அகமது தார் என்ற தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் தீவிரவாதி அடில் அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கடந்த வாரம் ஷாகீர் மாக்ரே என்ற 22 வயது இளைஞரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். புல்வாமா பகுதியில் மர பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த ஷாகீர், தீவிரவாதி அகமது தாருக்கு பல வகைகளில் உதவி செய்ததும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், 2018-ல் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி முகமது உமர் பரூக் மூலம் அடில் அகமது தார், ஷாகீருக்கு அறிமுகமானார் என்ற தகவலும் கிடைத்தது. ஷாகீர்தான் ராணுவத்தினர் நடமாட்டம் குறித்த தகவலை மனித வெடிகுண்டு தீவிரவா அகமது தாருக்கு கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video
இந்நிலையில் பயங்கரவாதி அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தந்தை மற்றும் மகள் இருவரை இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications