புல்வாமாவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம் தந்த தந்தை- மகள் கைது
ஶ்ரீநகர்: நாட்டை உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் தந்தை மற்றும் மகள் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி புல்வாமாவில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் வென்ற வாகனம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

தேசத்தையே உலுக்கியது இந்த கொடூர தாக்குதல். புல்வாமாவில் மனித வெடிகுண்டா செயல்பட்டு தாக்குதல் நடத்தியது அடில் அகமது தார் என்ற தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில் தீவிரவாதி அடில் அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கடந்த வாரம் ஷாகீர் மாக்ரே என்ற 22 வயது இளைஞரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். புல்வாமா பகுதியில் மர பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த ஷாகீர், தீவிரவாதி அகமது தாருக்கு பல வகைகளில் உதவி செய்ததும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், 2018-ல் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதி முகமது உமர் பரூக் மூலம் அடில் அகமது தார், ஷாகீருக்கு அறிமுகமானார் என்ற தகவலும் கிடைத்தது. ஷாகீர்தான் ராணுவத்தினர் நடமாட்டம் குறித்த தகவலை மனித வெடிகுண்டு தீவிரவா அகமது தாருக்கு கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video
இந்நிலையில் பயங்கரவாதி அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தந்தை மற்றும் மகள் இருவரை இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications