முக்கிய தகவல் பெற முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர சிங்கை பயன்படுத்திய பாக்.. என்ஐஏ குற்றப்பத்திரிக்கை
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கைதான முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர் சிங் உள்பட 6 பேர் மீது தேசிய புலனாய்வு துறை (என்ஐஏ) ஊபா சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத அமைப்ன ஹிஸ்புல்-முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் அரசு அமைப்புகளுடன் இணைந்து தீவிரவாத செயல்களை செய்து வருகிறது.
இந்த அமைப்பிற்கு உதவியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த டிஎஸ்பி தேவேந்திர் சிங் காஷ்மீரின் குல்கம் (Kulgam) மாவட்டத்தின் வான்போ (Wanpoh) பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாதிகள் கைது
அவருடன் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி நவேத் முஷ்டாக் என்ற நவேத் பாபு மற்றும் ரஃபி அகமது ஆகியோரும் பிடிபட்டனர். இதையடுத்து டிஎஸ்பி தேவேந்திர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தாக தன்வீர் அஹமத் வாணி என்ற தீவிரவாதியும் கைது செய்யப்பட்டார். அத்துடன் இர்பான் ஷாஃபி மிர், சையத் இஃப்ரான் அகமது ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் அதிகாரிகள்
முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர் சிங்கிற்கு டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு இருந்ததாக விசாரணைக்கு பின் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தேவேந்திர் சிங் பாகிஸ்தான் அதிகாரிகள் மூலம் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்ய உதவியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆயுத தடுப்பு சட்டம்
இந்நிலையில் முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர் சிங் உள்பட 6 பேர் மிது ஊபா சட்டத்தின் கீழ் என்ஐஏ வேழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் IPC மற்றும் 1967 ஆம் ஆண்டின் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு UA (P) சட்டத்தின் கீழ் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழும், வெடிமருந்துகள் தடுப்பு சட்டத்தின் கீழும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதம்
எல்லையைத் தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்துவதற்கு தேவேந்திர சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் உதவியதாகவும் இந்த ஆயுதங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர சிங்கை முக்கிய தகவல்களை பெற பாகிஸ்தான் அதிகாரிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications