ஜன.22ல் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் இல்லை.. திகார் சிறை நிர்வாகம்
Recommended Video
டெல்லி: 2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்குமாறு திகார் சிறை அதிகாரிகள் இன்று தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டனர். குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனுக்கள் தீர்த்து வைக்கப்படும் வரை தூக்கிலிட முடியாது என்பதால் இந்த கோரிக்கையை அவர்கள் டெல்லி அரசிடம் வைத்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராம் சிங் என்ற குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளிக்கு 18வயது நிறைவடையாததால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

டெல்லி நீதிமன்றம்
நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் வாரண்ட் பிறப்பித்தது. அதன்படி வரும் ஜனவரி 22ம் தேதி 4 பேருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கருணை மனு
இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றும் வாரண்டை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவும் அனுப்பி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் சங்கீதா, திங்கரா செஹல் அமர்வு, வாரண்டில் எந்த தவறும் இல்லை. அதனால் அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கூறியது. அதேநேரம் மனுதாரர் டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பளித்தது

டெல்லி அரசுக்கு நோட்டீஸ்
இதையடுத்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் முகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு டெல்லி அரசுக்கும் மாணவியின் பெற்றோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மனுவை நிராகரிக்க பரிந்துரை
இதனிடையே முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு டெல்லி மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளோம். கருணை மனுவை நிராகரிக்குமாறு பரிந்துரை கடிதத்தை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம். அது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் உடனடியாக அனுப்பப்பட்டு விட்டது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார்.

திகார் சிறை நிர்வாகம்
இதனிடையே கருணை மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது என்றும் எனவே குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை டெல்லி அரசு அறிவிக்க வேண்டும் என்றும் டெல்லி திகார் சிறை நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் 22ம் தேதி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications