கடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்
டெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளும், கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும், மிகவும் குறைவாகவே சாப்பிடுவதாகவும், டெல்லி திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் மற்றும் வழக்கில் அனைத்து வகை, சட்ட போராட்டங்கள் நடத்தியும், தூக்கு தண்டனை என்பது, 4 குற்றவாளிகளுக்கும், உறுதி செய்யப்பட்டு விட்டது.

பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு, 4 குற்றவாளிகளையும், தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
இதுதொடர்பாக திகார் சிறை வட்டாரங்கள் கூறுகையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக இப்போதிருந்தே சிறை ஊழியர்கள் தரப்பில், பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. சரியாக கருவிகள் வேலை செய்கிறதா என்பது உள்ளிட்ட அனைத்தும் பரிசோதிக்கப்படுகிறது. அனைத்து சட்ட போராட்டத்திலும், தோற்று விட்டதால் தூக்கு தண்டனை உறுதி என்ற நிலையில் இருப்பதை குற்றவாளிகள் உணர்ந்துள்ளனர்.
எனவே அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். இதனால் மிகவும் குறைவாகச் சாப்பிடுகிறார்கள். தினமும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை அவர்கள் உடல்நிலை மோசமடையவில்லை. இவ்வாறு சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கூடுதல் ஐஜி ராஜ்குமார் கூறியதாவது: 4 குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு முன்பாக அவர்களது கடைசி விருப்பங்கள் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். 4 பேரின் பதில்களுக்காக காத்திருக்கிறோம். இதுவரை 4 பேரும் எந்த பதிலும் தரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, துடிக்க துடிக்க பலாத்காரம் செய்து, எவ்வளவோ கெஞ்சியும், கொடுமையாக ஓடும் பஸ்சில் இருந்து கீழே தூக்கி வீசிய கொடூரர்களுக்கு, இந்த மரண வேதனை தேவைதான் என்று சக கைதிகளே, மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருவதாகவும், சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications