பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த 6-வது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 6-ஆவது தமிழர் நிர்மலா சீதாராமன் ஆவார். முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் ஒரு தமிழர்தான்.
மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 6-ஆவது தமிழர் நிர்மலா ஆவார்.
இதற்கு முன்னர் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் ஒரு தமிழர்தான்.
மத்திய பட்ஜெட்
1947-ஆம் ஆண்டு நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ஆர் கே சண்முகம். இவர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
முக்கிய சீர்திருத்தங்கள்
1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த டி கே கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
இந்திரா அமைச்சரவை
1975- ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த சி சுப்பிரமணியம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 1980, 1981-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ஆர் வெங்கட்ராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வரிக்குறைப்புகள்
1997-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் கனவு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. இதில் வரிக்குறைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை கொடுத்தார்.
6-ஆவது தமிழர்
இதுவரை ப.சிதம்பரம் 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாயிக்கு பிறகு அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை ப சிதம்பரத்தையே சாரும். இந்தநிலையில் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 6-ஆவது தமிழர் ஆவார்.