என்னை யாராலும் "டச்" கூட செய்ய முடியாது.. நான் பரமசிவன் ஆச்சே.. நித்தியானந்தா அசத்தல் பேச்சு
Recommended Video
டெல்லி: என்னை யாராலும் தொட முடியாது, எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்யாது என நித்யானந்தா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சொந்த ஊராக கொண்ட நித்யானந்தா பெங்களூர் பிடதியில் மடத்தை தொடங்கினார். அவரது மடத்துக்கு ஏராளமான சீடர்கள் வருகை தந்தனர். இதையடுத்து அவர் வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை தொடங்கியுள்ளார்.
அவர் மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அவர் ஈகுவடார் நாட்டில் இருப்பதாக தெரியவந்தது. இந்தநிலையில் தனித்தீவை உருவாக்கிய நித்யானந்தா அந்த தீவிற்கு கைலாசா என பெயரிட்டார்.

ஈகுவடார்
அந்நாட்டிற்கு தானே பிரதமர் என்று கூறிய அவர் புதிய கொடி, புதிய பாஸ்போர்டையும் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் நித்தி ஈகுவடார் நாட்டில் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது.
|
அழிக்க முடியாது
இந்த நிலையில் அவ்வப்போது ஒரு வீடியோவை வெளியிடும் நித்தியானந்தா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் என்னை யாராலும் தொடவும் முடியாது. அழிக்க முடியாது.

பரமசிவன்
எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்யாது. நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன். நான்தான் பரமசிவன். சீடர்கள் என்னுடன் இருப்பதால் நீங்கள் உங்களுடைய நேர்மை, விசுவாசத்தை என்னிடம் காண்பித்தீர்கள். உங்களுக்கு மரணமே இல்லை என பேசியுள்ளார்.

நித்தியானந்தா
கடந்த 2010-ஆம் ஆண்டு பெங்களூருவில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் இமாச்சல பிரதேசத்தில் வைத்து நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். இதனால் அவர் அங்கு பதுங்கிக் கொண்டு வீடியோவை வெளியிட்டு வருவதாக போலீசார் கருதுகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications