வென்டிலேட்டரில் சுவாசம்? உடல்நிலை மோசம்! "ஜூம் மீட்டிங்கில்" விளக்கேற்றி வழிபட்ட நித்யானந்தா சீடர்கள்
டெல்லி: மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் நித்யானந்தா விரைவில் குணமடைய அவரது சீடர்கள் ஜூம் மீட்டிங்கில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பி வரும் போது ரூ 1000 கோடி ஆசிரம பணத்தை தங்க கட்டிகளாக மாற்றி கொண்டு கைலாசாவில் வசித்து வருவதாக சொல்கிறார்.
கைலாசாவில் நன்றாக ஜாலியாக வசித்து வந்த நித்யானந்தா, தன்னை விமர்சிப்பவர்களை லைவ் வீடியோவில் வெளுத்து வாங்கி வந்தார். 45 வயதாகும் நித்யானந்தா எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கிறாரே என்றெல்லாம் பேசப்பட்டது.

யார் கண்ணு பட்டதோ
இந்த நிலையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. நித்யானந்தாவுக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. அவருக்கு கல்லீரல் அழற்சி ஏற்பட்டுள்ளது. அது போல் நுரையீரல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை ஆகியவை ஏற்பட்டதாக தெரிகிறது .மேலும் அவர் மூச்சு விட சிரமப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பேஸ்புக் பக்கம்
எனினும் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதில் அவர் தான் பூரண நலம் பெற அருணகிரி யோகேஸ்வரனுக்கு விளக்கேற்றி வழிபட்டு அதை செல்பியாக எடுத்து எனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மேலும் தான் தியான நிலையில் இருப்பதால் கண் விழித்தால் செல்பி படங்களை பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பிரார்த்தனை
இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கவலையில் உள்ள சீடர்கள் ஜூம் மீட்டிங் காலிற்கு ஏற்பாடு செய்தனர். அதில உலகெங்கும் வசிக்கும் நித்யானந்தாவின் சீடர்கள் இணைந்தனர். அப்போது நித்யானந்தா பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
Recommended Video

இந்தியா
இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் நித்யானந்தா இந்தியாவுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படுவார் , இல்லாவிட்டால போலீஸ் கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications