தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
டெல்லி: கால்வன் பள்ளத்தாக்கில் இருந்து சீனா படைகள் விலகிய நிலையில் திபெத் தலைவர் தலாய் லாமாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. சீனாவுடனான உறவில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் சமிக்ஞையாக இது பார்க்கப்படுகிறது.
சுதந்திர நாடாக இருந்த திபெத்தை சீனா கைப்பற்றி தமது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய நிலையில் திபெத் தலைவராக இருந்த தலாய் லாமா 1959-ம் ஆண்டு இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் அகதிகளாக தஞ்சம் அடைந்தார்.

திபெத்தால் யுத்தம்
இந்தியாவில் தலாய் லாமாவுக்கும் திபெத்திய அகதிகளுக்கும் தாராளமான் உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. சொந்த நாட்டை விட மிகவும் சுதந்திரமாகவே அகதிகளாக இருந்த போதும் திபெத்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். திபெத் ஆதரவு நிலைப்பாட்டால்தான் இந்தியா- சீனா யுத்தமே 1962-ல் மூண்டது.

திபெத் ஆதரவில் தளர்வு?
திபெத்தை தொடர்ந்து இந்தியா ஆதரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடனான நல்லுறவை வளர்க்கும் வகையில் முழுமையான திபெத் ஆதரவு போக்கை தளர்த்திக் கொண்டு வருகிறது மத்திய அரசு. கடந்த 2018-ம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவுக்கு வந்த 60-ம் ஆண்டு நிகழ்வுகளில் பாஜக தலைவர்களோ மத்திய, மாநில அரசு அதிகாரிகளோ பங்கேற்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

இந்தியா சீனா உறவில் பதற்றம்
இந்தியாவுக்கு நேர் எதிராக நேபாளமோ, தலாய் லாமாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கே தடை விதித்து சீனா விசுவாசத்தை காட்டியது. இந்த நிலையில் தலாய்லாமாவின் 85-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தற்போது எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் சீனாவுடனான இந்திய உறவில் பதற்றம் உருவாகி உள்ளது.

தலாய் லாமாவுக்கு வாழ்த்து இல்லை
அதே நேரத்தில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கால்வன் பள்ளத்தாக்கில் இருந்து சீனா ராணுவம் பின்வாங்கியிருக்கிறது. இந்த பின்னணியில் தலாய் லாமாவின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ, டெல்லி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீனாவை எதிர்த்துக் கொண்டிருக்கும் தைவான் நாடும் தலாய்லாமாவின் பிறந்த நாளை கொண்டாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications