ரம்ஜான் நோன்பு.. அதிகாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நடத்த முடியாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!
டெல்லி: ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில், 51 தொகுதிகளில் 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரம்ஜான் நோன்பு தொடங்கவுள்ளதால் 7 மணிக்கு பதிலாக அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாமூதின் பாஷா டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வாக்குப்பதிவு நேரம்
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது.
ஆனால் அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் விளக்கம்
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், எந்த குளறுபடியும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க இப்போதே தேர்தல் அதிகாரிகளுக்கு 15 முதல் 16 மணி நேரம் தேவைப்படுகிறது.

பூத் ஏஜென்டுகள் லேட்
அதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் 16 மணி நேரத்திற்கும் மேலாக பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில் காலை 4 மணிக்கே தேர்தலை தொடங்கினால், பூத் ஏஜென்டுகளும அந்நேரத்திலேயே வரவேண்டியிருக்கும். தற்போது 6 மணிக்கு வரவேண்டிய பூத் ஏஜென்டுகளே அந்நேரத்தில் வருவதில்லை.

நாளை முதல் நோன்பு
மேலும் இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சியுள்ளதால், நேரத்தை மாற்ற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரம்ஜான் நோன்பு நாளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications